முதல்வர் ஸ்டாலின் உடுமலை வருகை!!

   -MMH 

    உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 16 ம் தேதி வருகை தர உள்ளார்.

அமராவதி நகர் சைனிக் பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலர் குடியிருப்பை திறந்து வைக்கிறார். ராணுவ அதிகாரிகள், சைனிக் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கும் அரங்க கூட்டத்திலும் பேசுகிறார்.  மேலும் அமராவதி அணையை ஆய்வு செய்கிறார். இதுபோக திருப்பூர் மாவட்டம் முழுவதும் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் புதிய கட்டடங்களையும் திறந்து வைக்கிறார்.

இதையொட்டி காவல்துறை அதிகாரிகள், பொதுப் பணித் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பம்பரமாய் சுழன்று ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், ஐஜி, டிஆர்ஓ உள்ளிட்ட அதிகாரிகள் தினமும் ஆய்வு செய்து வருகின்றனர். சைனிக் பள்ளி வளாகத்தில் சாலைகள் மற்றும் அமராவதி நகரில் உள்ள சாலைகள் புதிதாக போடப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான திமுக நிர்வாகிகள் முதல்வரை வரவேற்க இப்போதே பரபரப்பாய் பணியாற்றி வருகின்றனர். முதல்வர் திருமூர்த்திமலை ஆய்வாளர் மாளிகையில் தங்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாளைய வரலாறு செய்திக்காக,

-துல்கர்னி உடுமலை.

Comments