பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான 'கோ கிளாம்' ஷாப்பிங் கண்காட்சி!!

 -MMH 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள், நகைகள், போன்ற பொருட்களுக்கான ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி கோவை  அவினாசி சாலையில் உள்ள சுகுணா அரங்கத்தில் துவங்கியது.

கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற , பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி தொடர்ந்து ஏழாவது ஆண்டாக  தமது விற்பனை கண்காட்சியை நடத்தி வருகிறது.இந்நிலையில் இதன் 31 வது எடிஷனாக  கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா   அரங்கில் விற்பனை கண்காட்சி  துவங்கியது.

ஜூலை 8  ந்தேதி முதல், மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், நகைகளுக்கென நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன..கோ க்ளாம் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்ற விற்பனை கண்காட்சி துவக்க விழாவில், முக்கிய விருந்தினர்கள் டிம்பிள்,ஸ்ரீவித்யா,அமுத சுரபி,வித்யா ரமேஷ்,பவ்யா மேனன்,சோபானா செல்வம்,ஸ்ரீவித்யா சிவக்குமார், ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்..

கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் ஷாப்பிங் கண்காட்சி குறித்து பேசுகையில், இங்கு ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கண்காட்சியில்  டில்லி,ஜெய்ப்பூர்,புனே என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக ஆடை, ஆபரணங்கள்,வைர நகைகள், குழந்தைகளுக்கான கைவினை பொருட்கள், இந்தியாவின் பிரபல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பெண்களுக்கான, ஜிமிக்கி கம்மல், வளையல்,வெள்ளி அணிகலன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. 

குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் அழகுக்கலை பொருட்கள், சிகை அலங்கார பொருட்கள், முக அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றிற்கான தனி தனி அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டுள்ளதாகவும், மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் கோவை,திருப்பூர்,ஈரோடு,நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருவதாக தெரிவித்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments