தூத்துக்குடியில் ரூ.72ஆயிரம் மதிப்புள்ள டி-சர்ட்டுகள் திருட்டு! லாரி டிரைவர் கைது!!

தூத்துக்குடியில் லாரியில் கொண்டு வந்த ரூ.72ஆயிரம் மதிப்புள்ள டி-சர்ட்டுகள் திருடியதாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.  தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் அதிசயமணி மகன் ஆபிரகாம் அமிர்தராஜ் (36). டி-சர்ட் வியாபாரம் செய்து வருகிறார். 

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவர் திண்டுக்கலில் இருந்து டி- சர்ட்களை வாங்கி லாரி மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தாராம். தூத்துக்குடியில் மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு லாரி குடோனில் இருந்த சரக்குகளை சரிபார்த்த போது அதிலிருந்த 357 டி-ஷர்ட்களை காணவில்லையாம். இதன் மதிப்பு ரூ.72ஆயிரம் ஆகும். 

இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் ஆபிரகாம் அமிர்தராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் லாரி டிரைவரான திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் பகவதிராஜ் (50) என்பவர் டி-ஷர்ட்களை திருடியது தெரியவந்தது. 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 357 டி-ஷர்ட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments