ராபி பயிர் காப்பீடு (இன்சூரன்ஸ்) தேதி அறிவிப்பு!!!

பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தில் ராபி பருவ பயிர்களை காப்பீடு செய்து பயன்பெறலாம் என விவசாயிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பருவ மழை காலங்களில் வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதித்திடும் பொழுது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி 2022-2023ஆம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணைகள் பெறப்பட்டுள்ளது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதன்படி நடப்பாண்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், புதூர், ஒட்டப்பிடாரம், கருங்குளம், தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்துார் மற்றும் உடன்குடி வட்டாரங்களில் உள்ள 222 குறுவட்டங்களில் நெல்-III, கம்பு, சோளம், உளுந்து, பாசிபயறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மற்றும் பருத்தி பயிர்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. 

மக்காசோளப் பயிருக்கு மட்டும் வருவாய் கிராமமட்டத்தில் 313 வருவாய் கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை 15.11.2022க்குள்ளும் மக்காச்சோளம் மற்றும் பருத்தியை 30.11.2022க்குள்ளும், சோளம் மற்றும் நிலக்கடலை பயிர்களை 15.12.2022க்குள்ளும், கம்பு, எள், சூரியகாந்தி பயிர்களை 31.12.2022க்குள்ளும், நெல் III பயிருக்கு 31.01.2023க்குள்ளும் பதிவு செய்து அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இத்திட்டத்தில் வங்கிகளில் கடன்பெறும் விவசாயிகள் மற்றும் கடன்பெறா விவசாயிகள் அனைவரும் தங்கள் விருப்பத்தின் பேரில் இத்திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையங்கள் Common Service Centres - CSC) மூலமாகவோ வங்கிகள் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். 

எனவே நடப்பு ராபி பருவத்தில் பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் எதிர்பாராத இடர்பாடுகளால் ஏற்படும் பொருளாதார இழப்புகளில் இருந்து காத்துக் கொள்ள இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகள் அனைவரும் காப்பீடு செய்வதற்கான இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நவரை/கோடை நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.467/-, மக்காசோளப் பயிருக்கு ரூ.219/-, சோளப் பயிருக்கு ரூ.115/-, கம்பு பயிருக்கு ரூ.109/-, உளுந்து மற்றும் பாசி பயிருக்கு ரூ.209/-, நிலக்கடலை பயிருக்கு ரூ.265/- எள் பயிருக்கு ரூ.113/ சூரியகாந்தி பயிருக்கு ரூ.150/-, பருத்தி பயிருக்கு ரூ.595/-, பயிர் காப்பீட்டுக் கட்டணமாக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்யும் போது பூர்த்தி செய்து கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான இரசீதைபெற்றுக் கொள்ளவேண்டும். 

காப்பீடுபதிவு செய்யப்படும் அடங்கலில் உள்ள வருவாய் கிராமம், சர்வே எண், சாகுபடி செய்யப்படும் பயிர் மற்றும் பரப்பு, வங்கி கணக்கு எண் முதலான அடிப்படை விபரங்களை ஒப்புகை சீட்டில் சரிபார்த்து பெற வேண்டும். காப்பீடுபதிவின் ஆவணங்கள் மற்றும் இரசீதை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments