வன விலங்குகளின் இறைச்சி விற்பனை அமோகம்!! விற்ற மூன்று பேர் தப்பி ஓட்டம்!!!


சில மாதங்களாகவே காட்டு விலங்குகளை வேட்டையாடி அது நிறைச்சிகளை விற்று வருவது தொடர்கதையாக நடந்து கொண்டு இருக்கிறது . தொடர்ந்து வனவிலங்குகள் வேட்டையாடப்படுகிறது என்ற புகார்கள் வந்த பொழுதில் வனத்துறை  கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. 

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் நேற்று காலை காட்டு பன்றி இறைச்சி அடிமாலி பகுதியில் விற்பயினை செய்வதாக புகார் வந்துள்ளதை தொடர்ந்து ஆன சாலை சார்ந்த ரமணன் என்பவரை வனத்துறை அதிகாரிகள் நோட்டமிட்டு வந்துள்ளனர். அதேபோல் ரமணன் 109 கிலோ காட்டு பன்றி இறைச்சி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அடிமாலி பகுதியில் விற்பனை  செய்ய சென்றுள்ளார் பின் தொடர்ந்து வனத்துறையினர் அவர் இரண்டு இருசக்கர வாகனத்தில் உள்ளவர்களிடம் விற்றுக் கொண்டிருப்பதை பார்த்து கையும் களவுமாக பிடிக்க முயற்சி செய்தனர்.

வனத்துறையினர் வருவதை கண்டு மூன்று பேரும் தங்களுடைய வாகனங்களையும் இறைச்சியையும் அங்கே விட்டுவிட்டு தப்பி ஓடி சென்று விட்டனர். பின்னர் ரமணன் தங்கி இருந்த வாடகை வீட்டில் சென்று பரிசோதனை செய்து பார்க்கும் பொழுது வனவிலங்குகளை வேட்டையாட தேவையான அனைத்து உபகரணங்களையும் வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர் தப்பி ஓடிய மூவரையும் பிடிக்க வனத்துறையினர் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments