திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகே முதியவர் கீழே விழுந்து படுகாயம்!!

-MMH 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மதியம் வயதான முதியவர் ஒருவர் ஜல்லிகற்கள்  மேல் விழுந்து பலத்த காயமடைந்தார்.

பலத்த காயங்களுடன்கீழே கிடந்த அவரைப் பார்த்து வந்து அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தகவல் கொடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அனுப்பி வைத்து முதலுதவி செய்தேன்.

அருகில் பலர் நின்று வேடிக்கை பார்த்த நிலையில் யாரும் உதவிக்கு வரவில்லை.

அந்த வழியாக வந்த நாளைய வரலாறு திருச்செங்கோடு பகுதி நிருபர் அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து 108 அவசர சிகிச்சை வாகனத்தை அழைத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

-மா.ரஞ்சித்குமார், திருச்செங்கோடு.

Comments