ரஞ்சி கிரிக்கெட்டில் கோப்பை இறுதிப்போட்டி! பெங்கால்-சவுராஷ்டிரா அணிகள் இன்று பலப்பரீட்சை!!

ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் பெங்கால்-சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. 

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மனோஜ் திவாரி தலைமையிலான பெங்கால் அணியில் அபிமன்யு ஈஸ்வரன், ஷபாஸ் அகமது, முகேஷ் குமார், ஆகாஷ்தீப், சுதீப்குமார் கராமி, அனுஸ்டப் மஜூம்தார் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெய்தேவ் உனட்கட் சவுராஷ்டிரா அணிக்கு திரும்பி இருக்கிறார். அவர் கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்படுகிறார்.

சவுராஷ்டிரா அணியில் ஹர்விக் தேசாய், ஷெல்டன் ஜாக்சன், அர்பித் வசவதா, சிராக் ஜானி, சேத்தன் சகாரியா ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். கோப்பையை வெல்ல இரு  அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments