கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் கல்லூரியில் இரண்டு நாட்கள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது…!!

  -MMH

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் கல்லூரியில் இரண்டு நாட்கள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது…!!

  கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் கல்லூரியில் வணிக மேலாண்மைத்துறை  மற்றும் தொழில் முனைவோர் உருவாக்க மையம் ஆகியோர் இணைந்து இரண்டு நாட்கள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது…!!

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகள் கல்லூரியில் பயிலும் போதே வணிகம் சார்ந்த மேலாண்மை திறனை வளர்க்கும் விதமாக இரண்டு நாட்கள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.மனைய்யியல் கல்லூரியின் வணிக மேலாண்மைத்துறை  மற்றும் தொழில் முனைவோர் உருவாக்க மையம் ஆகியோர் இணைந்து,நடத்திய இக் கருத்தரங்கம் தொழில் முனைவோர் சூழல் அமைப்பு மற்றும் மாற்றத்திற்கான மேம்பாடுகள் இந்தியா 2047 எனும் தலைப்பில் நடைபெற்றது.

முன்னதாக இதற்கான துவக்க விழா கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது…இதில், பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர்  தியாகராஜன் தலைமை வகித்தார்.. பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்  பாரதிஹரிசங்கர் பதிவாளர் முனைவர் கெளசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக  "ஸ்டார்ட்அப் இந்தியா" அமைப்பின் தலைமை அதிகாரி திருமதி.ஆஸ்தா குரோவர் சிறப்பு உரை ஆற்றினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இதில், முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள், வணிக மேலாண்மைத்துறை சார்ந்த ஆர்வலர்கள்,மற்றும்  பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்களி. புத்தாக்க மையங்கள், இளம் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

கருத்தரங்க நிகழ்வில் பல்கலைக்கழக மாணவியரின் படைப்பாக்கத் திறன் சார்ந்து தொழில் முனைவோராக விளங்குபவர்களின் பொருட்களும் சந்தைப்படுத்தப்படுத்தப்பட்டன..சிறந்த தயாரிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும்  வணிக மேலாண்மைத் துறையினரும் மற்றும் அவினாசிலிங்க தொழில் முனைவோர் புத்தாக்க மையத்தினரும் செய்திருந்தனர்.

-சீனி, போத்தனூர்.


Comments