வால்பாறை நடுமலை பகுதி அருகே அகற்றப்படாமல் உள்ள குப்பை கழிவுகளால் துர்நாற்றம்!!

 -MMH

வால்பாறை நடுமலை பகுதி அருகே அகற்றப்படாமல் உள்ள குப்பை கழிவுகளால் துர்நாற்றம்!!

 கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கக்கன் காலனி நடுமலை பகுதி செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை அகற்றாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள கக்கன் காலனி பகுதியின் அருகில் இது போன்று குப்பை கழிவுகள் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் துர்நாற்றத்தில் பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இந்த துர்நாற்றம் வீசும் குப்பைக் கழிவுகளால் நோய் தொற்று ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்களும் நோய் தொற்றுகளும் பரவி வரும் இந்த காலகட்டத்தில் நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று  சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நோய் தொற்று ஏற்படும் வகையில் துர்நாற்றம் வீசும் இந்த குப்பைகளை நகராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments