கோவையில் இளம்பெண் தற்கொலை!!

-MMH

கோவை கணபதி ராஜீவ் காந்தி ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 31). இவருடைய மனைவி ரேவதி(28). இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில்  ரமேஷ் மற்றும் ரேவதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரேவதி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சரவணம்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து  ரேவதியின் கணவர் ரமேஷ் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments