தமிழ்பாரம்பரிய கலைகளை மீட்கும் விதமாக கோவையில் நடைபெற்ற மாபெரும் சிலம்பம் போட்டி!!

-MMH

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர். 

கோவையில் நேஷனல் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில அளவிலான முதலாவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி, மதுரை, கோவை தஞ்சை, புதுக்கோட்டை உட்பட சுமார் 28 மாவட்டங்களில் இருந்து 1000 த்திற்கும் மேற்பட்ட  வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். 

இதில் குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு,மான் கொம்பு,வேல் கம்பு, இரட்டைக் கம்பு,சுருள் வாள், தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டன.ஜூனியர், சப் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.

ஒவ்வொருவரின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில்  நடத்தப்பட்ட இந்த போட்டியில் 5 வயது முதல் ஐம்பது வரையிலான போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கங்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன. இதில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள் அடுத்து நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments