கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன் "ஸ்ரீ சாய் குரு", பத்து மாதங்களில் 23 தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை!!

-MMH

கோவையை அடுத்த அன்னூர் பகுதியை சேர்ந்த தம்பதியர் பிரபாகரன், கிருத்திகா.இவர்களது இளைய மகன் ஸ்ரீசாய் குரு.அதே பகுதியில் உள்ள ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக்  பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஸ்ரீ சாய் குரு,கடந்த பத்து மாதங்களாக கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள யோவா யோகா அகாடமியில், பிரபல யோகா சாதனை மாணவி வைஷ்ணவியிடம் யோகா பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

அகாடமியின் நிறுவனர் சரவணன் தீவிர முயற்சியால், யோகாவை விரைவாக கற்று கொண்ட சிறுவன்,யோகாவின் மிக கடினமான விருட்ச விருட்சிகம், கண்ட பெருண்டம், சப்த திம்பாசனம், சக்ர பந்தாசனம் போன்ற ஆசனங்களை எளிதாக கற்றுள்ளார். ஆரம்ப கட்ட பயிற்சி நேரங்களிலேயே தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்ட சிறுவன் ஸ்ரீ சாய் குரு, இது வரை சுமார் 23 போட்டிகளில் கலந்து கொண்டு அனைத்து போட்டிகளிலும் பெரும்பாலும் முதல் பரிசையும் வென்று அசத்தியுள்ளார்.

அண்மையில் துபாய் மற்றும் கம்போடியா நாடுகளில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதக்கங்கள் வென்றுள்ளார்.இவரது அசாத்தியமான சாதனைகளை பாராட்டி மதுரை தமிழ்ச்சங்கம், கோவை மாவட்ட நடிகர் சங்கத்தினர் என பல்வேறு அமைப்பினர் சிறுவனுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளனர்.

பத்து மாதங்களில் பதக்கம் மற்றும் கோப்பைகளை குவித்துள்ள சிறுவனுக்கு ஸ்ரீ அம்பாள் துளசி பள்ளி நிர்வாகத்தினர், யோவா யோகா அகாடமியில் பயிலும் மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என  பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-சீனி, போத்தனூர்.

Comments