பள்ளிக்கூடம் அருகே பழுதடைந்த சாக்கடையால் சுற்று சுவருக்கு பாதிப்பு! மேலும் நோய் தொற்று பரவும் அபாயம்!!

கன்னியாகுமரி மாவட்டம்,தோவாளை தாலுகா,பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பூதப்பாண்டி சர்.சி.பி அரசு மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள பள்ளிக்கூட தெருவில் வடிகால் ஓடை உடைந்து பெயர்ந்து காணப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதன் அருகே  அரசு பள்ளியின் சுற்று சுவர் உள்ளதால் நாளடைவில் பள்ளியின் சுற்றுசுவர் எளிதில் பழுதடையும் காரணியாக இந்த உடைந்த ஓடை அமைகிறது.

எனவே சம்மந்தப்பட்ட நிர்வாகம் பூதப்பாண்டி பள்ளிக்கூடத்தெருவில் உள்ள உடைந்த ஓடைகளை சீரமைத்து நோய் தொற்று பரவாமல் இருக்கவும்  பள்ளியின் சுற்றுசுவருக்கு பங்கம் ஏற்பதாவாறும் உடைந்த ஓடையினை

சீரமைக்க இப்பகுதி பொது மக்களின் சார்பாக சமூக ஆர்வலர் பூதப்பாண்டி  எஸ்.நாராயணசாமி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது நலன் கருதி  கோரிக்கை வைக்கிறார்.

-M.சுரேஷ்குமார்.

Comments