திருவட்டாரில் மோட்டார் சைக்கிள் திருடிய நெல்லை வாலிபர் உட்பட 3 பேர் கைது!! ஒருவருக்கு போலீஸ் வலை!!

திருவட்டாரில் நவீன மோட்டார் சைக்கிளை திருடிய நெல்லை மாவட்ட ஆசாமி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதோடு மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவட்டாரை அடுத்த மாத்தார் கண்ணங்கரைவிளையைச்சேர்ந்த  சியோலின் கிரம்த்(20) என்ற பட்டதாரி வாலிபரின் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த நவீன மோட்டார் சைக்கிள்  கடந்த 2.ம் தேதி அன்று இரவு காணாமல் போனது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதையடுத்து திருவட்டார் போலீசில் அளித்த புகாரின் பேரில் மோட்டார் சைக்க்ளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டபோது  செங்கோடி கொட்டறவிளையை சேர்ந்த ரெஞ்சித், மணக்குன்று  விஜின்  ஆகியோர்  வேறு சிலருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடியதை தெரிந்து கொண்டனர். இவர்கள் இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தபோது வடக்கன் குளத்தை சேர்ந்த இசக்கியப்பனிடம் மோட்டார் சைக்கிளை கொடுத்ததாகவும், ஓட்டிப்பார்க்கிறேன் என்று கூறினார்

நாளைய வரலாறு செய்திக்காக,

-எல் இந்திரா, நாகர்கோவில்.

Comments