தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மிரட்டல்!! வார்டு உறுப்பினர்கள் 6 பேர் கூண்டோடு ராஜினாமா!!

மதுரை அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரும், தி.மு.க. ஒன்றியச் செயலாளருமான முத்துராமன், நிர்வாகத்தில் தலையிட்டு மிரட்டுவதாகக் கூறி, 6 வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்கள் மதுரை மாவட்ட கலெக்டரிடம் ராஜினாமா கடிதம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்திருக்கிறது கோவிலாங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் ஜெயந்தி. இவரது கணவர் முத்துராமன். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவர், செல்லம்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். தனது மனைவி ஊராட்சித் தலைவராக இருப்பதால், கோவிலாங்குளம் ஊராட்சி நிர்வாகத்தில் முத்துராமனின் தலையீடு மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. மேலும், ஊராட்சி உறுப்பினர்களை மிரட்டியும் வந்திருக்கிறார்.

இதனால் கடும் அதிருப்தியில் இருந்து வந்த வார்டு உறுப்பினர்கள், தனம், ஜெயலட்சுமி, ஜெயக்கொடி, பஞ்சு, தங்கசாமி, பாண்டியராஜன் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தனர். 

- தமிழரசன், மேலூர்.

Comments