கால நேரம் பார்க்காமல் பணி செய்யும் சாலை பணியாளர் மற்றும் மின்சார வாரிய ஊழியர்களுக்கு வால்பாறை பொதுமக்கள் பாராட்டு !!!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் தற்பொழுது கனமழை பெய்து வருகிறது இதனால் சாலையில் மரங்கள் முறிந்து விழுவதும் வேரோடு சாய்வதுமாக உள்ளது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் வாகன போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்ளது மேலும் கடுமையான மழை மற்றும் காற்றின் காரணமாக அடிக்கடி மின்தடங்களும் ஏற்பட்டு வருகிறது. 

இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் சாலை பணியாளர்களும் மின்வாரிய ஊழியர்களும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர்.

சாலையில் விழுந்த மரங்களை உடனுக்குடன் அகற்றியும் மின்சார பழுது ஏற்பட்டுள்ள இடங்களில் உடனுக்குடன் சென்று அதை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தும் வருகின்றனர். 

நேரம் காலம் பார்க்காமல் பணி செய்து வரும் சாலை பணியாளர்கள் மற்றும் மின்சார வாரிய ஊழியர்களை வால்பாறை பகுதி பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments