கோவை வ.உ.சி., பூங்கா உயிரினங்கள் இடமாற்றம்!!

கோவை மாநகராட்சி வ.உ.சி., பூங்காவில் உள்ள உயிரினங்களை இடம் மாற்றுவதற்கு, தலைமை வன உயிரின காப்பாளர் அனுமதி அளித்துள்ளார். கோவை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்த வ.உ.சி., உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, ஒட்டகம் ,முதலை, பாம்பு போன்ற வன விலங்குகள் பராமரிக்கப்பட்டன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உயிரியல் பூங்கா பராமரிப்பதற்கான விதிமுறையை, மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடுமையாக்கியது. அதன்படி  வ.உ.சி., உயிரியல் பூங்கா மேம்படுத்தப்படாததால், ஆணைய அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, அங்கீகாரத்தை ரத்து செய்தது.

இதனால் உயிரினங்களை மட்டும் வேறிடங்களுக்கு மாற்றுவதற்கு, தலைமை வன உயிரின காப்பாளர் அனுமதி அளித்து, எங்கெங்கு மாற்றலாம் என, பட்டியல் அளித்துள்ளார். அமராவதி முதலை பண்ணைக்கு முதலைகளையும், கிண்டியில் உள்ள பாம்பு பண்ணையில் பாம்புகளையும் விடுவிப்பதற்கு பரிசீலிக்கப்படுகிறது. மேலும் கழுகு உள்ளிட்ட பறவையினங்கள். வேறு பூங்காவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments