சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை!! பேருந்துகளில் நெரிசல்களை தவிர்க்கும் புதிய வகை இருக்கைகள்!!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை,பேருந்துகளில் நெரிசல்களை தவிர்க்கும் புதிய வகை இருக்கைகள் போன்ற நவீன உத்திகளை  லயன்ஸ் கிளப் கோயமுத்தூர் சுப்பீரியர் கிளப் அமைப்பினர் உருவாக்கி அசத்தியுள்ளனர்.

அதிகரித்து வரும் இயற்கை வள பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு  குறித்து பல்வேறு தன்னார்வ அமைப்பினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோயமுத்தூர் லயன்ஸ் கிளப் சுப்பீரியர் கிளப் நிர்வாகிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய வழிமுறைகளை கூட்டு முயற்சியாக கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளியலறை, கழிவறை, வாஷ்பேசின், சமையலறை பயன்பாடு போன்றவற்றில் தேவைக்கு அதிகமாக பயன்படுத்தும்  நீரை சேமிக்கும் முறைகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது மற்றும் பேருந்துகளில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் புதிய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இருக்கைகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர் அரங்கில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் முதல் நிலை ஆளுநர் நித்யானந்தம் இரண்டாம் நிலை ஆளுநர் ராஜசேகர் மற்றும்  கோயமுத்தூர் சுப்பீரியர் கிங்ஸ் அமைப்பின் தலைவர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கிய சித்தார்த்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கௌரவ அழைப்பாளராக பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். இதில் பேருந்துகளில் நெரிசலான நேரங்களில் புதிய தொழில் நுட்ப வடிவிலான  இருக்கைகளை பயன்படுத்துவதால் அதிக இட வசதி கிடைப்பதுடன் நெரிசலான ஆபத்தான பயணங்களை தவிர்க்க இயலும் என தெரிவித்தனர். மேலும் அன்றாடம் பயன்படுத்தும் நீரின் அளவை குறைப்பது, அவற்றை மீண்டும் பயன்படுத்தும் முறைகள் குறித்தும், பிளாஸ்டிக் கழிவுகளை  ஒவ்வொரு வீட்டிலும் எவ்வாறு குறைத்து பயன்படுத்தலாம் என்பது குறித்தும் ஆலோசனைகளை கூறினர்.

-சீனி, போத்தனூர்.

Comments