காலை உணவு திட்டத்தை அரசு ஏற்ற நடத்த வேண்டி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மாலை காலை உணவு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

Watch video here...

தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்டார ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு சங்கம் மற்றும் அங்கன்வாடி சங்கத்தினர் நேற்று மாலை 3 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,  அதனை தொடர்ந்து தூத்துக்குடி புதுக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கை:

காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அரசு ஏற்று நடத்த வேண்டும், போர்க்கால அடிப்படையில் காலி பணியிடங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தேர்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம் மற்றும் அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு மையங்களுக்கு தேவையான எரிவாயு உருளையே அரசே ஏற்று வழங்க வேண்டும், சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60 இருந்து 62 உயர்த்திட வேண்டும்.

கடுமையான விலைவாசியால் வாழ்க்கை நடத்த முடியாமல் தவிக்கும் எங்களின் வாழ்க்கை நடத்த ஊதியத்தை உயர்த்த வேண்டும் , தமிழக அரசு மானிய உரிமைத் துறை அமைச்சரே பேச்சுவார்த்தை நடத்திய உத்திரவாதத்தை நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாண்டியன் மாவட்ட தலைவர் ஜெயலட்சுமி மாவட்டச் செயலாளர் கட்டபொம்மன் மாநில பொதுச்செயலாளர் கண்ணன் மாநில துணை பொதுச்செயலாளர் பாக்யா தணிக்கையாளர் சண்முக லட்சுமி பொருளாளர் என பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments