கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் விழா!!

கோவை வடவள்ளி சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம் சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி பட்டயபடிப்பில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககத்தின் இயக்குனர் முனைவர் பாலசுப்பிரமணியம் பட்டம் பெற வருகை தந்த மாணவர்களை வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு வேளாண் இடுபொருள் கூட்டமைப்பின் மாநில தலைவர் மோகன் மற்றும் மாநில செயலாளர் சத்தியமூர்த்தி வாழ்த்துரை வழங்கினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் பாலசுப்பிரமணி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் முனைவர் ரவீந்திரன், சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காமன் வெல்த் ஆப் லர்னிங் இயக்குனரும் முனைவருமான ஷட்ரக், மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

இதில் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக 2023 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற 508 மாணவர்களுக்கு பட்டயபடிப்புக்கான சான்றிதழ்களை வழங்கினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments