பள்ளி குழந்தைகளின் திறனை வளர்க்கும் விதமாக மாநில அளவிலான ஓவிய போட்டி!!

பள்ளி குழந்தைகளின் திறனை வளர்க்கும் விதமாக மாநில அளவிலான ஓவிய போட்டி-வண்ண ஓவியங்களை தீட்டி வியக்க வைத்த குழந்தைகள். பள்ளி குழந்தைகளின் கலை மற்றும் படைப்பாற்றல் திறனை வளர்க்கும் விதமாக கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவிய போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

குழந்தைகளின் கலை மற்றும் ஆக்கப்பூர்வமான திறனை வளர்க்கும் விதமாக கோவையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு  வருகிறது.அதன் தொடர்ச்சியாக கோவை பீளமேடு பகுதியில் பள்ளிக் குழந்தைகளின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக குளோபல் ஆர்ட் சார்பில் மாநில அளவிலான ஓவிய போட்டி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த போட்டியில் கோவை, மதுரை,திருச்சி,என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த  பள்ளி குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. ஐந்து வயது முதல் பதனைந்து வயது வரையிலான மாணவ,மாணவிகள் இதில் கலந்து கொண்டு தங்களது படைப்பாற்றல் திறனை வண்ண ஓவியங்களாக  படைத்து அசத்தினர்.

தொடர்ந்து இதில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்கும் சிறந்த ஓவியங்களுக்கும் பரிசுகள் சான்றிதழ்கள்,பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

-சீனி, போத்தனூர்.

Comments