கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்து காவல் அதிகாரியின் மனிதநேய செயல்!! பொதுமக்கள் பாராட்டு!!!

கோவை உக்கடம் பகுதியில் இருந்து ஆத்துப்பாலம் பகுதி வரை தற்பொழுது மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதே போன்று தான் உக்கடம் பஸ் நிலைய பகுதிகளில் சாலைகள் முற்றிலும் பெயர்த்து எடுக்கப்பட்டு உள்ளது. அதில் சில இடங்களில் பெரிய பள்ளம் ஏற்பட்டு வாகனங்களில் செல்வோர் தடுமாறும் நிலைமை ஏற்பட்டது. அதுபோன்று ஒரு பெரிய பள்ளம் உக்கடம் பஸ் நிலைய சந்திப்பில் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு அதை கடந்து சென்று கொண்டிருந்தனர்.

இதை கவனித்த B1 காவல் நிலையத்தின் காவல் அதிகாரி செல்வராஜ் என்பவர் மிகுந்த மனிதநேயத்துடன் அந்த பள்ளத்தை கற்களை கொண்டு மூடி வாகனங்களில் செல்வோர் தடுமாறாமல் இருக்க வழிவகை செய்து சீர்படுத்தினார். போக்குவரத்து காவல் அதிகாரியின் மனிதநேயமிக்க இந்த செயலை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

-ஜாபர்.

Comments