குறிச்சி குளக்கரையில் கோவில் முன்பு உள்ள குப்பை தொட்டியை அகற்ற வேண்டும்!!

கோவை-பொள்ளாச்சி ரோடு குறிச்சி குளக்கரையில் பொங்காளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். 

கோவையை காக்கும் கோனியம்மன் என்பது போன்று குறிச்சி சுந்தராபுரம் பகுதி மக்களை காக்கும் குறிச்சி பொங்காளியம்மன் என்று பக்தர்களால் இந்த கோவில் போற்றப்பட்டு வருகிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையில் இந்த கோவிலின் முன்பு, மாநகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments