தூத்துக்குடி குரூஸ்புரம் பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்!!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட குரூஸ்புரத்தில் உள்ள புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகளுக்கு கடந்த வாரம் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டியை வழங்கினார்.

அப்போது அங்குள்ள மாணவிகள் தங்களது பள்ளிகளில் விளையாடுவதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கி உதவிட வேண்டும் என்றுகேட்டுக் கொண்டனர். அதனடிப்படையில் தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் விளையாட்டுத் துறை மிகப்பெரிய அளவில் புத்துணர்ச்சி பெற்று வருகிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதே வழியில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள குரூஸ்புரம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தேவையான செஸ் போர்டு, கேரம்போர்டு, உள்ளிட்ட விளையாடுவதற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை பள்ளியின் தாளாளர் ரோஸ்மேரி, தலைமை ஆசிரியை அந்தோணி ஜோஸ்பின்மேரி, மற்றும் ஆசிரியைகளிடம் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி மற்றும் ஜோஸ்பர், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-மாரிதாஸ், தூத்துக்குடி தெற்கு.

Comments