புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியை ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அடிக்கல் நாட்டினார்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏ கே எஸ் நகரில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் .

ஓட்டப்பிடாரம் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதியதாக ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் 15வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூபாய் 17.32 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி நிதியிலிருந்து   3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் விழா நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வின் போது ஒட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், யூனியன் பொறியாளர் பிரான்சிஸ்கோ, ஊராட்சி செயலாளர் செல்வி, திமுக ஒன்றியம்  அவைத்தலைவர் சுப்பிரமணியன் ஒப்பந்ததாரர் பெரிய மோகன் பாஞ்சாலங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments