தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா !!


தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் 28ம் ஆண்டு புஷ்பாஞ்சலி விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 7:00 மணிக்கு மாரியம்மனுக்கு புஷ்ப பாவாடை அலங்காரமும் அதைத் தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரணையும் நடந்தது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாலை 4 மணிக்கு நவ கன்னிகா பூஜையுடன் தொடங்கி மாரியம்மனுக்கு பல வகையான பூக்களுடன் 28ம் ஆண்டு புஷ்பாஞ்சலி பூஜைகளை பிரதான பட்டர் சிவா மற்றும் குரு ஆகியோர் செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.


விழாவில் கோவில் தக்கார் பாலசுப்பிரமணியன், அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா, அறிவழகன், அறங்காவலர்கள் பாலகுருசாமி, மகாராஜன், மற்றும் கோபால், சக்திவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-மாரிதாஸ், தூத்துக்குடி தெற்கு.

Comments