பேக்கரிகடை காசாளரை மிரட்டி பணம் பறிப்பு!! சுந்தராபுரம் காவல்துறையினர் இருவரை கைது செய்தனர்!!!

கோவை மாவட்டம் வெள்ளலூர் சார்பதிவாளர் அலுவலகம் எதிரே தனியார் பேக்கரி செயல்பட்டு வருகிறது, கடந்த மாதம், இந்த பேக்கரியில் காசாளர் பணியில் இருந்தபோது, உள்ளே நுழைந்த 2 மர்மநபர்கள், காசாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றனர்,

மேலும், அந்த சாலை வழியாக சென்றவர்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்தனர், இது தொடர்பாக சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையில் ஆய்வாளர் நடேசன் அவர்கள் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் வெள்ளலூரை சேர்ந்த 26 வயதான மதன்குமார் என்ற மில்கி மதன், வெள்ளலூரை சேர்ந்த 24 வயதான மூவேந்திரன் என்பதும் பேக்கரியில் காசாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்புயைடவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர், தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி. ராஜேந்திரன்.

Comments