செக்காரக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியில் , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரைப்படி முழு சுகாதார திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஐ.ராமலெட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அனைத்து வீடுகளிலும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரித்து வழங்க அனைவரும் உறுதி ஏற்றனர். மேலும் செக்காரக்குடி ஊராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயண்படுத்தினால் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயலர் ஆதிமூலப்பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments