கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!!

-MMH

கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்து ள்ளது கோவை குற்றாலம். கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்த பகுதிக்கு உள்ளூர் வாசிகளும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையின் காரணமாக, கடந்த மாதத்தின் துவக்கத்தில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த ஜூலை 5ம் தேதி முதல், கோவை சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் தடை விதித்தனர். 

தற்பொழுது நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து சீரானதையடுத்து, நேற்று முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் அனுமதியளித்தனர். தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். 

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments