அரசு சார்பில் மாமன்னன் சுந்தரலிங்கம் அவர்களின் 224ஆவது நினைவு தினம் அனுசரிப்பு!!


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகில் சுந்தரலிங்க நகரில் அமைந்துள்ள  அவரது மணிமண்டபத்தில் மாமன்னன் சுந்தரலிங்கம் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதிகாலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் அவர்கள் மாமன்னன் சுந்தரலிங்கனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


பின்னர் வட்டாட்சியர் சுரேஷ் அவர்களின் தலைமையில் வருவாய் அலுவலர் வசந்த் குமார் அவர்கள் பாஞ்சாலங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராஜா அவர்கள்  சுந்தரலிங்கம் வாரிசு பொன்ராஜ் அவர்கள்  மற்றும் துணை வட்டாட்சியர் மகாராஜ அவர்கள்  கிராம நிர்வாக அலுவலர் மகாராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

மேலும் தனி வட்டாட்சியர் செ
ல்வக்குமார் அவர்கள் மாமன்னன் சுந்தரலிங்கம் இல்லத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்வின் போது வட்டார வழங்கல் அதிகாரி கருப்பசாமி அவர்கள் ஒட்டப்பிடாரம் கிராம நிர்வாக அலுவலகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments