தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பாஜக சார்பில் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 308 வது ஜெயந்தி விழா!!

இந்திய வரலாற்றில் முதன் முதலில் வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கமிட்டவர் மாமன்னர் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும்  முன்னோடியாகக் கருதப்படுகிறார். இவரது 308-வது பிறந்தநாள் செப்டம்பர் 1-தேதி கொண்டாடப்படுகிறது.

அதைத் தொடர்ந்து  பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 308 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தெய்வச்செயல்புரம் கட்சி அலுவலகத்தில் வைத்து அவருடைய திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் வக்கீல் R.பிரபு தலைமையிலும் ஒன்றிய தலைவர் S.நங்கமுத்து முன்னிலையிலும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பிறமொழி பிரிவு மாவட்ட செயலாளர் A.தம்பான், விவசாய அணி மாவட்ட செயலாளர் P.பேச்சி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் P.முருகன், 

வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் A.வசந்த், சமூக ஊடக பிரிவு மாவட்ட துணைத் தலைவர் C.சீனிவாசன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் N.சிவசுப்பிரமணியன்  ஒன்றிய நிர்வாகிகள் ஆன்மீக பிரிவு ஒன்றிய தலைவர் E.தம்பான், இளைஞர் அணி ஒன்றிய தலைவர் A.சிலம்பரசன், இளைஞர் அணி ஒன்றிய பொதுச் செயலாளர் R.பிரவின், இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் M.ராபின், முருகன், ஒன்றிய துணைத் தலைவர் M.சித்திரை குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments