ஓட்டப்பிடாரம் அருகே மளிகை கடைக்காரர் விஷம் அருந்தி தற்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரம் அருகே ஓசனூத்து கிராமத்தில்  நடுத்தெருவைச் சேர்ந்த ராசியா மகன் கோவில் பிள்ளை வயது (51) என்பவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் கோவில்பிள்ளை தனது மளிகை கடைக்கு அடிக்கடி தனது மனைவி குருவம்மாளின் நகைகளை அடகு வைப்பார் என கூறப்படுகிறது. 

இதனால் கோவில்பிள்ளைக்கும்  அவரது மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக சரியாக இருவரும் பேசிக் கொள்ளவில்லை இதனால் கோவில்பிள்ளை மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் மளிகை கடையின் மாடியில் தான் விஷம் குடித்து விட்டதாக உறவினர் ஒருவருக்கு செல்போன் மூலம் தகவல் கூறியுள்ளார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதை அடுத்து உறவினர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள்  கோவில்பிள்ளையை மீட்டு சிகிச்சைக்காக ஆட்டோ மூலம் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அதிகாலை 2 மணி அளவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கோவில்பிள்ளை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம்  குறித்து ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments