தேர்வுக்கு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா புத்தகங்களை ஓட்டப்பிடாரம் உதவி ஆய்வாளர் முத்துராஜா அவர்கள் வழங்கினார்!!

  -MMH

  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதியில் தேர்வுக்கு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா புத்தகங்கள்  வழங்க முடிவு செய்து தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நூறு நபர்களை கண்டறிந்து விலையில்லா கையேடு புத்தகங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா மற்றும் உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம் அவர்கள் இன்று 20/09/23 ஆம் தேதி இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு படிக்கும் வறுமையில் உள்ள மாணவ மாணவியருக்கு  தேர்வில் தேர்ச்சி பெரும் விதமாக காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்த சுமார் 100 நபர்களுக்கு 200  விலையில்லா காவலர்  கையேடுகளை வழங்கினார்கள் .

தொடர்ந்து உதவி  ஆய்வாளர் முத்துராஜ் அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது படிக்கும் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்குவது என சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிகழ்வு போது ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments