விளாத்திகுளம் அருகே கல்லூரி மாணவி உட்பட இருவர் தற்கொலை : போலீஸ் விசாரணை!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோடாங்கிபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராசையா. இவருடைய மகள் சசி காஞ்சனா (20). இவர் விளாத்திகுளத்தில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் தனிமையாக இருக்கும் பொழுது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சங்கரலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மற்றொரு சம்பவம்:
விளாத்திகுளம் அருகே உள்ள கே. சுந்தரேஸ்வரபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த உத்தண்டராமன் மகன் பார்த்திபன் (30).இவர் கடந்த ஆண்டு மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்தார். அதில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அதிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து 17ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த பார்த்திபன் மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம்.
Comments