விளாத்திகுளத்தில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணி!!

 -MMH

  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர்  கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு கூடுதல் பணியிடங்கள் நிரப்ப வேண்டும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஊழியர் விரோத நடவடிக்கைகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்கள் மீது புனையப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், 

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் உடனே அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் விளாத்திகுளம் வட்ட கிளை சார்பில்  போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக  வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணி புரிந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்விற்கு வருவாய்த்துறை மாவட்ட இணை செயலாளர்  ச. பாலமுருகன் தலைமை தாங்கினார், முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் சரவண பெருமாள், வட்டத் தலைவர் மாரிமுத்து முன்னிலை    வகித்தனர், கோரிக்கை அட்டை அணிந்து விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் பாஸ்கரன், கலந்து கொண்டனர்.  வட்டாட்சியர் அலுவலக மற்றும் நில எடுப்பு அனைத்து நிலை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments