ஆரைக்குளம் & புதியம்புத்தூர் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரம் அருகே ஆரைக்குளம் ஊராட்சியில் ரூபாய் 54 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ஓட்டப்பிடாரம் அருகே ஆரைக்குளம் ஊராட்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தெற்கு ஆரைகுளம் கிராமத்தில் ரூபாய் 24 லட்சம் மதிப்பீட்டில் பெண்கள் கழிவறை மற்றும் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணி,குறுக்கன்குளம் ஊரணி தூர்வாரி மடை கட்டுதல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கும், 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE..


வடக்கு ஆரைக்குளம் கிராமத்தில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகளையும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற சண்முகையா சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து புதியம்புத்தூர் ஊராட்சி தெற்கு காலனியில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ சந்தியா சண்முகையா அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டாட்சியர் சுரேஷ் பஞ்சாயத்து தலைவர் சங்கரி செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments