ஓட்டப்பிடாரத்தில் பாஜக அரசு கண்டித்து மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!

மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்து சொந்த லாபங்களுக்காக நாட்டை நாசமாக்கிய பாஜக ஆட்சியை விட்டு வெளியேறு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று  ஓட்டப்பிடாரத்தில் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டது.

போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்:

விஷம் போல் ஏறி வரும் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வை  கட்டுப்படுத்திடக்கோரியும், 2014 ல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 410 இப்போது 1240 ஆக உயர்த்திவிட்டு வங்கி மூலம் மானியம் என ஏமாற்றக்கூடாது, மாணவர்களுக்கு கல்வி கடன் உடனே வழங்கிட வேண்டும், அரசு அலுவலகங்களில் காலிப்  பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும்  

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE..

காலி பணியிடங்களை உடனே நிரப்பி தங்கு  தடையின்றி உயிர் காக்கும் மருந்துகளை வழங்கிட வேண்டும், ஓட்டப்பிடாரத்தில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வ.உ.சி தொடக்கப்பள்ளி அமைத்திட வேண்டும், ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர் மற்றும் உடற்கூறு ஆய்வு பணி உடனே அமைத்திட வேண்டும்,

 ஓட்டப்பிடாரத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் பொது கழிப்பிட வசதி செய்து தந்திட வேண்டும், புதியம்புத்தூரில் ஜவுளி பூங்கா அமைத்திட வேண்டும், கொம்பாடி தளவாய்புரம் கிராமத்தில் 21 ஆண்டுகளாக காலமாக 36 நபர்களுக்கு பட்டா உடனடியாக வழங்கிட கோரியும்,  ஆரைகுளம் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டாவை உடனே வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய பொருளாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.மாவட்ட குழு உறுப்பினர்கள் அழகு, அசோக்குமார்  முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கணேசன் சவுந்தரபாண்டி சமுத்திர வேல் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை போலீசார் கைது செய்து ஓட்டப்பிடாரம் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர். மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில் 30க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments