பள்ளி மாணவர் விடுதியில் இருந்து இரண்டு மாணவர்கள் தப்பி ஓட்டம்!!

 
   -MMH 

பள்ளி மாணவர் விடுதியில் இருந்து இரண்டு மாணவர்கள் தப்பி ஓட்டம்!!

  கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள கல்லார் குட்டியில் அமைந்துள்ள எஸ் எஸ் கே மாணவர் விடுதியில் சுமார் 36 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி அருகில் உள்ள கல்லாறு குட்டி  மற்றும் பனங்குட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர். நிலையில் இந்த மாணவர் விடுதியில் இருந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும்  இரண்டு மாணவர்கள் தப்பியோடி உள்ளனர்.



நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த புதன்கிழமை அன்று மாலை நேரத்தில் வருகை பதிவேடு எடுத்த பொழுது அவர்கள் இருவரும் இருந்ததாக தெரியவந்துள்ளது அதன் பின்னர் இரவு நேரத்தில் அவர்கள் தப்பி ஓடியதாக தெரியவந்துள்ளது. அடுத்த நாள் காலையில் உடனடியாக அடிமாலி காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் மாணவர்களை தேடுவதில் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகின்றனர் தாமதம் இன்றி விரைவில் அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்க சிறப்பு குழு நியமித்துள்ளன. பொதுமக்கள் யாரேனும் இவர்களைக் கண்டால் உடனடியாக அடிமாலி காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஜான்சன்

மூணார்.

Comments