நூல் உற்பத்தி செய்யும் ஓ. இ., மில்கள் வரும் 7ஆம் தேதி வேலை நிறுத்தம் அறிவிப்பு...

 

-MMH

  தொழில் நஷ்டம் காரணமாக கழிவுப் பஞ்சிலிருந்து நூல் உற்பத்தி செய்யும் ஓ. இ., மில்கள் வருகிற 7 முதல் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும்,  தமிழக ஜவுளி தொழில் அழிவுப்பாதையை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் ஓ. இ., மில்கள் சங்கமான ஒஸ்மா தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட கழிவுப் பஞ்சிலிருந்து நூல் உற்பத்தி செய்யும் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் இயங்கி வருகின்றன. இந்த ஓ.இ., மில்கள் பருத்தி கழிவிலிருந்து நாள் ஒன்றுக்கு 25 லட்சம் கிலோ கிரே நூல்களும், பிளாஸ்டிக் பாட்டில் பைபர், ஆயுத்த ஆடை நிறுவ பனியன் கட்டிங் கழிவிலிருந்து 15 லட்சம் கலர் நூல் உற்பத்தியும் செய்யப்படுகிறது. பல்வேறு காரணங்களால் இந்த ஓ.இ., மில்கள் கடந்த ஒரு வருடமாக மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளதாகவும், ஓ.இ., மில்களுக்கான  மூலப்பொருளான கழிவுப் பஞ்சு கடந்த ஒரு வருடமாக வரலாறு காணாத விலையில் விற்று வருவதாகவும், கடந்த 20 வருட காலமாக பருத்தி விலையில் 60% விலையில் கழிவுப்பஞ்சு விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கழிவுப்பஞ்சு விலையில் 80% வரை நூற்பாலைகள் விற்றதால் ஓ. இ., மைல்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், கழிவுப் பஞ்சு விலை கிலோவுக்கு ரூபாய் 20 குறைந்தால் மட்டுமே ஓ. இ.., மில்களை தொடர்ந்து இயக்க முடியும் என்பதால் ஓ. இ., மில்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 

இதுதொடர்பாக , ஓ. இ., மில்கள் சங்கமான ஓஸ்மா தலைவர் அருள்மொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசியவர், கடந்த ஒரு மாதமாக விசைத்தறி காடாதுணி ஏற்றுமதி ஆகாமல் தேக்கம் அடைவதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் துணிக்கு விலை கிடைக்கவில்லை என்று 20எஸ் ஓ. இ., வெப்ட் ரக நூலை கிலோவுக்கு 140ம், வார்ப்ரக நூலை கிலோவுக்கு 150ம் என்ற விலையில் கொள்முதல் செய்வதாகவும், இதனால் ஓ. இ., மி ரூபாய் 10 முதல் 15 வரை கிலோவுக்கு நஷ்டம் வருவதாக, பல்வேறு விலையேற்றம் இருந்தால், ஓ. இ., மில் நூல் விலை என்பது இன்றளவும் 4 ஆண்டுகளுக்கு முன் விற்பனை ஆன விலை என்பதையும் சுட்டிக்காட்டினார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கழிவு பஞ்சு விலை தற்போது 97 ரூபாய் கிலோவிற்கு இருக்க வேண்டிய நிலையில்,  117 ரூபாய்  என பஞ்சாலைகள் விற்பதாகவும், இந்த விலையேற்றம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறியவர், மின்கட்டணம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் கூடுதல் நெருக்கடியான சூழலை ஏற்படுத்தியுள்ளதுடன் , ஜவுளி தொழிலில் அங்கமாக உள்ள ஓ . இ ., மில்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டியவைகள் குறித்து சில கோரிக்கைகள் முன்வைத்தார். அதில், மத்திய அரசு

கழிவு பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும் எனவும் , கழிவு பஞ்சாலைகளில் உற்பத்தி செய்யும் நூல் அளவீட்டை கண்காணிக்க வழிவகை செய்யம் வகையில் HSN குறியீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றவர், பாலிஸ்டர், விஸ்கோஸ் ஆகியவற்றிக்கு தரக்கட்டுப்பாட்டு  வைப்பதை கைவிட வேண்டும், 11 சதவீத பஞ்சு இறக்குமதி வரியை நீக்க வேண்டும் எனவும் மத்திய அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதேபோல மாநில அரசு, பழைய கட்டணத்திற்கே மின் கட்டணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 

பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், சோலார் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு வரி விதிக்க கூடாது என்று மாநில அரசுக்கான பிரதானமான கோரிக்கையாக முன்வைத்தார். மேலும், தமிழகத்தில் கழிவு பஞ்சாலைகள் நஷ்டத்தில் இயங்கி வருவதால் வரும் நவம்பர்  7 முதல் நவம்பர் 30 ம் தேதி வரை உற்பத்தி நிறுத்தம்  செய்கின்றோம் எனவும்,  சந்தை நிலவரம் சீராகும் வரை உற்பத்தி நிறுத்தத்ததை தொடர திட்டமிட்டு  இருப்பதாகவும் தெரிவித்தவர், இது வரை 50 க்கும் மேற்பட்ட கழிவு பஞ்சாலை மில்கள் விற்பனை செய்து விட்டு தொழிலை விட்டு சென்று விட்டதாகவும், 50 சதவீத உற்பத்தி மட்டுமே இப்போது 

கழிவு பஞ்சாலைகளில் உற்பத்தி நடைபெறுகின்றது என தெரிவித்த அவர், தினமும் 40 லட்சம் கிலோ நூல் உற்பத்தி நிறுத்தப்படுவதால் தினமும் 60 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி தினந்தோறும் தடைபடும் எனவும் தெரிவித்தார். தீபாவளி பண்டிகைக்கும் உற்பத்தி நிறுத்ததிற்கும் தொடர்பில்லை என தெரிவித்த அவர், விசைத்தறிகளும் போராட்டம் அறிவித்து இருப்பதால் , நூல் விற்பனை இருக்காது என்பதால் உற்பத்தி நிறுத்தம் செய்கின்றோம் எனவும், இந்த உற்பத்தி நிறுத்தம் காரணமாக 

நேரடியாக ஒரு லட்சம் பேரும், மறைமுகமாக ஒரு லட்சம் வேலை இழப்பார்கள் எனவும் தெரிவித்தார். ஜவுளி பொருட்கள் தேவையான அளவு சந்தையில் இருப்பதால் ஜவுளி விற்பனையாளர்களுக்கும் , வாடிக்கையாளர்களுக்கு ஆடைகள் கிடைப்பதில் எந்தவித பிரச்னை இல்லை என்றார். வேஷ்டி, துண்டு, லுங்கி, நைட்டி, ஆகிய குறைந்த விலையிலான பொருட்கள் ஓ. இ., மில்கள் உற்பத்தி செய்யும் நிலையில், சாலையோர சாதாரண மக்கள் விற்பனை என்பது பாதிக்கும் நிலை ஏற்படும் என்றார். 

கட்டுப்படியாகும் விலைக்கு கழிவுப் பஞ்சு கிடைக்க மத்திய அரசு வழிவகுக்க வேண்டும் என்றும், 115லிருந்து 85க்கு வர வேண்டும்,  ஆனால், கழிவுப் பஞ்சு குறையாததற்கு ஏற்றுமதியே காரணம் என்றவர், மின் கட்டணத்தை தமிழக அரசு குறைக்கவில்லை எனில் ஓ. இ.மில்கள் மூடப்படும் என்றும், 

தமிழக முதல்வர் நேரடியாக  அழைத்து பேச மறுப்பதாகவும், தமிழகம் தான் மின் கட்டணம் குறைவு என தமிழ்நாடு மின்சார வாரியம் சொன்னாலும்,  குஜராத், பஞ்சாப், மஹாராஷ்டிரா மின் சலுகை மானியமாக வழங்கி,  தொழிலை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார். குஜராத் 2000 கண்டெய்னர் நூல் ஏற்றுமதி செய்வதாகவும், ஆனால் தமிழகம் 100 கண்டெய்னர் கூட ஏற்றுமதி செய்வதில்லை என்பதை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்குவதுடன் இருக்கும் தொழில் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

-சீனி, போத்தனூர்.

Comments