பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு…!!


கோவை: வருகின்ற 2024ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தலைமையில் இன்று ஜிசிடி பொறியியல் கல்லூரியில் தேர்தல் முன்னெச்சரிக்கையாக வாக்கு பெட்டிகள் வைக்கக்கூடிய அறையை ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில்  மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் சர்மிளா, மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு பணியில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய  மாவட்ட ஆட்சியர் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் டிசம்பர்  9 ம் தேதி வரை சிறப்பு திருத்தம் பட்டியலில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த கல்லூரிகள் தோறும் வாக்காளர் இணைப்பு குறித்து தெரிவித்து வருகிறோம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் இளம் வாக்காளர்கள் 18 சதவீதத்திலிருந்து 24 சதவீதம் வரை உயரும் என்று தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் தாலுக்கா வாரியாக வாக்காளர்கள் இணைக்கும் பணியும் , திருத்தம் செய்யும் பணியும் நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தில் இன்று  பாராளுமன்ற தேர்தலுக்கு இரண்டு இடங்களில் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. இன்று கோவை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி பொறியியல் கல்லூரியிலும்  பொள்ளாச்சி நாச்சிமுத்து மகாலிங்கம் கல்லூரியிலும் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் வாக்குச்சாவடி பெட்டிகள் வைக்கப்படக்கூடிய ஸ்டாக்ரூம், பதிவு செய்த பெட்டிகள் வைக்கக்கூடிய ஸ்டாக்ரூம் என அனைத்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கடந்த முறை பாராளுமன்ற தேர்தலுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட செயல்பாடுகளே தற்போதும்  நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் தமிழக கேரள எல்லை பகுதி ஓரம் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு வாரம் ஒரு முறை அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் கோவை மாவட்டத்திற்குள் மாவோயிஸ்டுகள் நுழையாதவாறு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள எல்லையோர சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்!!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments