பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!! எஸ்.பி க்களுக்கு டி.ஐ.ஜி முத்துசாமி அவர்கள் உத்தரவு!!

வேலூர் சரகத்திற்கான மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் வேலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடந்தது இந்த கூட்டத்திற்கு டி.ஐ.ஜி  முத்துசாமி அவர்கள் தலைமை தாங்கினார். எஸ்.பி க்கள் மணிவண்ணன் (வேலூர்), கிரண் ஸ்ருதி (ராணிப் பேட்டை), ஆல்பர்ட் ஜான் ( திருப்பத்தூர்), கார்த்திகேயன் (திருவண்ணாமலை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த மாதம் நடந்த குற்றங்கள் தொடர்பாகவும் அதில் எத்தனை வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் ரவுடிகள் மீதும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வரும் காலங்களில் அதிக அளவு குற்றங்கள் நடைபெறாத வகையில் எஸ்சி, எஸ்டி தொடர்பான வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குழந்தை திருமணங்கள் தொடர்பாக அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நான்கு மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதனை எஸ்பிக்கள் கண்காணிக்க வேண்டும்.

இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி  குற்றங்களை குறைத்து குற்றவாளிகள் கண்காணிக்கப்பட வேண்டும் மேலும் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  நான்கு மாவட்ட எஸ்பி களுக்கு டி.ஐ.ஜி முத்துசாமி அவர்கள் உத்தரவிட்டார். இதில் நான்கு மாவட்டங்களை சார்ந்த ஏ.டி.எஸ்.பி கள் டி.எஸ்.பி க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தீபாவளி பண்டிகை என்பதால் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் அதிக அளவில் கடைக்கு வருவார்கள் அதேபோல் சொந்த ஊருக்கு செல்லவும் அதிக அளவு பஸ் நிலையங்களில் கூடுவார்கள் எனவே போக்குவரத்து விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments