ஒட்டப்பிடாரத்தில் காற்றாலை நிறுவனங்கள் நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்பு! - பாஜக போராட்டம் அறிவிப்பு! வட்டாச்சியர் தலைமையில் சமாதான கூட்டம்.!!!!

 


தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் ஒட்டப்பிடாரம், மீனாட்சிபுரம் ,மேட்டூர், முப்பலிபட்டி ஆகிய கிராமங்களில் காற்றாலை நிறுவனங்கள் நீர்வழிப்பாதை பொதுப் பாதைகள் ஓடைகள் என ஆக்கிரமிப்பு செய்துள்ளனர், அவற்றை அகற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் பிறப்பித்துள்ள உத்தரவை பின்பற்றாத காற்றாலை நிறுவனங்களை கண்டித்து ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இன்று  பாஜக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற இருந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது தொடர்பாக வட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இந்த சமாதான பேச்சுவார்த்தை வட்டார வளர்ச்சி அலுவலர் ஓட்டப்பிடாரம் அவர்களின் 16.11. 2022-ம் தேதி அறிவப்பான மீனாட்சிபுரம், லட்சுமிபுரம் ,மேட்டூர் முப்பலிபட்டி பகுதிகளில் உள்ள நீர் வழி பாதை ஆக்கிரமிப்பு அகற்றி தர வழங்கிய அறிவிப்பின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.


மேற்படி கிராமத்தில் நாளை ஆய்வு செய்த பின்னர் ஆக்கிரமிப்பு ஏதேனும் இருப்பின் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை அகற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  அதுவரையில் எந்த போராட்டமும் ஆர்ப்பாட்டமும் தற்காலிகமாக நிறுத்திக் கொள்வது என அனைவராலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது


இந்த கூட்டத்தில் வருவாய் துறை ஊரக வளர்ச்சித் துறை காவல் துறை மற்றும் பாஜக கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் காற்றாலை நிறுவன சார்பில் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஓட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments