பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான வட்டார அளவிலான கூட்டம் .!!!

 

தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தின் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான வட்டார அளவிலான கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இக்கூட்டத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை) கோவில்பட்டி மேரி டயானா ஜெயந்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் சித்ராதேவி முன்னிலை வைத்தார்.


இக்கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரீமன் ,வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, பவனந்தீஸ்வரன், மகாலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் திலகா , காவல்துறை ,உதவி ஆய்வாளர் விஜயகுமார் சமூக ஆர்வலர் அதிசயமணி சைல்ட் ஹெல்ப் லைன் உமா மகேஸ்வரி, ஆசிரிய பயிற்றுநர்கள் சிறப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் வனிதா தலைமையில் பள்ளி செல்லா குழந்தைகளின் ஒருங்கிணைப்பாளர் மலர்கொடி செய்திருந்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஓட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments