எப்போதும்வென்றான் அருகே செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்தபோது மயங்கி விழுந்து விவசாயி உயிரிழந்தார்!!

தூத்துக்குடி மாவட்டம் 

ஓட்டப்பிடாரம் தாலுகா எப்போதும்வென்றான் அருகே உள்ள நீராவி புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் தங்கையாபெருமாள் (32), இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு காட்டில் செடிகளுக்கு மருந்து அடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.  இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆஸ்பத்திரியில  சிகிச்சை பலனின்றி தங்கையாபெருமாள் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜின்னா பீர்முகமது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த தங்கையாபெருமாளுக்கு பாலம்மாள் என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments