இந்தியா ஆப்கானிஸ்தான் மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி!!

பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.

 ரோகித் சர்மா 121 ரன்னும், ரிங்கு சிங் 69 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

வெற்றியை தீர்மானிக்க 2-வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா  சூப்பர் ஓவரில் 11 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. எனவே ஆப்கானிஸ்தானை  சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தானை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கும், தொடர் நாயகன் விருது ஷிவம் துபேவுக்கும் அளிக்கப்பட்டது.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments