மூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 71 வயது முதியவர்??


கேரளா
மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார்: இடுக்கி மாவட்டம் மற்றும் தமிழ்நாடு குமுளிக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கும் ஆனை விலாசம் சாஸ்தா நடைப்பகுதியில் வசித்து வரும் சுமார் 71 வயது மதிக்கத்தக்க முதியவர் முத்துராஜ் என்பவர் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி காலை நேரத்தில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர், சிறுமிகளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 அவ்வாறு மூன்று வயது சிறுமியை ஊஞ்சலில் அமர வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரியவந்துள்ளது. உடனடியாக அங்கு சிறுமிகள் அழுது கொண்டே அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டனர்.

உடனடியாக சைல்டு லையனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த முதியவர் மூன்று வயது சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று தெரியவந்தது. உடனடியாக காவல்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து தலைமறைவாக இருந்த முத்துராஜை தேனியில் இருந்து குமுளி எஸ் ஹெச் ஓ ஜோவின் ஆண்டனியின் தலைமையில் குற்றவாளியை தேடி கண்டுபிடித்தனர். உடனடியாக அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு  அவர் சிறையில் அடைக்கப்பட்டார்

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-ஜான்சன் 

மூணாறு.

Comments