75வது குடியரசு தினம்: கோவை தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை துவக்கம்!

 

75வது குடியரசு தின விழா வருகின்ற 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் பொதுமக்களுக்கு எளிதாக தேசியக்கொடி கிடைக்க கூடிய வகையில் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை நடைபெறுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதன்படி கோவையில் உள்ள தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை துவங்கி உள்ளது. கோவை கூட்ஸ் ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் இன்று முதல் தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது. இதனை முதுநிலை தபால் அதிகாரி ஜெயராஜ் பாபு தொடங்கி வைத்தார்.

தேசியக்கொடி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோவை அஞ்சல் கோட்டத்தில் ஆர்.எஸ்.புரம், கோவை சென்ட்ரல், கணபதி, சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், ராம்நகர் மற்றும் முக்கிய தபால் நிலையங்களில் தேசியக் கொடியை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments