குடியரசு தின விழாவில் பங்கேற்க வால்பாறை பழங்குடியின தம்பதிக்கு அழைப்பு!!


கோவை மாவட்டம் வால்பாறை கல்லார்குடி பகுதியைச் சேர்ந்த ஜெயபால், ராஜலட்சுமி தம்பதியினர்  ஆனைமலை மலைத்தொடரில் வாழும் பழங்குடியினருக்காக தெப்பக்குளம் மேடு பகுதி நில உரிமை மீட்பு போராட்டத்தை அறவழியில் நடத்தி நில உரிமை பெற்று தந்தார்கள்.  
மேலும் தனது கிராமத்தை நாட்டின் சிறந்த முன் மாதிரி கிராமமாக மாற்றி உள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இவர்களின் செயலை பாராட்டும் விதமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் இந்த ஆண்டு  டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இருவரும் கலந்து கொள்ள தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசின் பழங்குடியினர் அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

மேலும் குடியரசுத் தலைவர் வழங்கும்  விருந்திலும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments