கோவை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் 17ம் தேதிக்கு மாற்றம்!!


கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, பாலக்காடு மெயின் ரோட்டில் உள்ள ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் வரும், 10ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக இருந்தது. இதில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஊழியர்கள்  தேர்வு செய்ய உள்ளன. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம். செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் வரை அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.

தற்பொழுது 10ம் தேதி நடைபெறுவதாக இருந்த முகாம் 17ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments