பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி - 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

 

கோவையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற பெண்களுக்கான இரவுநேர மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஓடினர். கோவை வஉசி மைதானத்தில் ஜெம் மருத்துவமனை மற்றும் ஜெம் பவுண்டேசன் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதன் பாதுகாப்பு மற்றும் புற்றுநோயால் பாதிக்கபட்டவர்களை மீட்கும் விதமாக இரவு நேர மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

5000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டியில் 10 கி.மீ,5 கி.மீ,3 கி.மீ என மூன்று பிரிவுகளாக ஓடினர். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்தியா அளவில் கோவையில் மட்டும்தான் பெண்களுக்காக நடத்தக்கூடிய மாரத்தான் போட்டி எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் மாரத்தான் போட்டியில் பெண்கள் பங்கேற்று உள்ளதாகவும் இந்த மாரத்தான் போட்டியில் வரும் வருவாய்களை முழுமையாக புற்று நோய்க்காக செலவு செய்யப்படும் எனவும் கடந்த ஆண்டு 100 நபர்களுக்கு இலவசமாக புற்றுநோய் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஒருங்கிணைப்பாளரான மருத்துவர் பிரவீன்ராஜ் தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments